புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்..! வைரலாகும் வீடியோ..!!

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்..! வைரலாகும் வீடியோ..!!

ஸ்ரீநகர்:

மாற்றுத்திறனாளி குழந்தைக்கு மதிய உணவு ஊட்டிய பரிவாக கவனித்த சிஆர்பிஎப் வீரர் இக்பால் சிங்குக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின், புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைக் படை தாக்குதலுக்கு 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர்.

இந்த தாக்குதல் நடந்த வாகனங்களில் ஒன்றைத்தான் இந்த சிஆர்பிஎப் வீரரான இக்பால் சிங் ஓட்டிச்சென்றுள்ளார். இந்த சம்பவத்துக்கு முன்புதான், ஸ்ரீநகரின் சாலையின் ஓரத்தில் இரும்பு படிகளின் மீது அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளி சிறுவன் அழுதுகொண்டிருந்த நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த சிஆர்பிஎப் வீரர் அவனை கவனித்துள்ளார்.

உடனே அங்கு சென்ற இக்பால் சிங் என்ற வீரர், அந்த சிறுவனிடம் விசாரித்தபோது, பசியில் வாடிய நிலையில் அழுதுக்கொண்டிருந்த அவனுக்கு உணவு, தண்ணீர் கொடுத்துள்ளார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவ, ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியும் தனது டுவிட்டர் பதிவில் இந்த வீரருக்கு சல்யூட் செய்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி எல்லோர் மனதிலும் அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த வீரரை பாராட்டி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்