சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு ஸ்டாலினை அழைக்காதது பாஜகவின் பிரிவு மனப்பான்மையை காட்டுகிறது.
மதத்தை முன்வைத்து பாஜக பிரசாரம் செய்ததால்தான் காங்கிரஸின் தேர்தலில் தோல்வியடைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.