மதத்தை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக.. நாராயணசாமி பேட்டி.!

மதத்தை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக.. நாராயணசாமி பேட்டி.!

சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு ஸ்டாலினை அழைக்காதது பாஜகவின் பிரிவு மனப்பான்மையை காட்டுகிறது.

மதத்தை முன்வைத்து பாஜக பிரசாரம் செய்ததால்தான் காங்கிரஸின் தேர்தலில் தோல்வியடைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்