மதுரை:
சிவகங்கை மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் கருப்பாயி 60, இவரை அவரது உறவினர்கள் கைவிடப்பட்டுள்ளனர்.
இதனால் 20 ஆண்டுகளாக மதுரை அருகே உள்ள அனுப்பானடி பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கழிவறையில் குடியிருந்து வருகிறார்.
கழிவறைக்கு வரும் மக்கள் சில்லறை காசை கொடுத்துவிட்டு செல்கின்றனர். அதனை வைத்து தன்னுடைய வயிற்றுப்பசியை தீர்த்துக்கொள்கிறார்.
இவருக்கு இன்னும் முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை.
முதியோர் உதவித்தொகை கிடைத்தால் தன்னுடைய வாழ்க்கையை எந்தவித இன்னல்களும் இல்லாமல் கடத்தி விடுவேன் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.