பிறப்பு உறுப்பு அறுப்பு: மர்ம நபரின் சிசிடிவி புகைப்படம் வெளியீடு..!

பிறப்பு உறுப்பு அறுப்பு: மர்ம நபரின் சிசிடிவி புகைப்படம் வெளியீடு..!

சென்னை:

சென்னையில் ஆண்களின் பிறப்பு உறுப்பை அறுத்து கொலைசெய்யும் சைக்கோ கொலையாளியின் சிசிடிவி புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையின் ரேட்டேரி பாலம் அருகே, கொளத்தூரை சேர்ந்த அஸ்லாம் பாஷா என்பவரது பிறப்பு உறுப்பை அறுபட்ட நிலையில் மயங்கிய நிலையில் இருந்தார். அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் உயிரிழந்தார்.

இந்நிலையில், மீண்டும் அதே இடத்தில் அதேபோன்ற சம்பவம் கடந்த 4ம் தேதி நடந்துள்ளது. கூடங்குளத்தை சேர்ந்த நாராயணன் என்பவர் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள இரும்பு கடையில் வேலைபார்த்து வந்துள்ளார்.

அவர் போதையில் ரெட்டேரி மேம்பாலத்தின் அடியில் உறங்கிக்கொண்டிருந்தபோது, நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் அவரின் பிறப்பு உறுப்பை கடித்து குதறியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிய அவருக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த மாதவரம் போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமாராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்திவந்நநிலையில், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மர்ம உறுப்பை அறுத்த நபர் நடமாடும் காட்சி பதிவாகி இருந்தது.

லுங்கி அணிந்தபடி நடமாடும் அந்த நபர் குறித்து தகவல் தெரிவிந்தால் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது மாதவரம் காவல் ஆய்வாளர் ஜவஹருக்கோ தகவல் தெரிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்