ஆண்களின் பிறப்புறுப்பு அறுப்பு..! சென்னையில் சைக்கோ கொலையாளி..!!

ஆண்களின் பிறப்புறுப்பு அறுப்பு..! சென்னையில் சைக்கோ கொலையாளி..!!

சென்னை:

சென்னையில் ஆண்களின் பிறப்பு உறுப்பை அறுத்து கொலைசெய்யும் சைக்கோ கொலையாளியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் சென்னையின் ரேட்டேரி பாலம் அருகே, கொளத்தூரை சேர்ந்த அஸ்லாம் பாஷா என்பவரது பிறப்பு உறுப்பை அறுபட்ட நிலையில் மயங்கிய நிலையில் இருந்தார். அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் உயிரிழந்தார்.

இந்நிலையில், மீண்டும் அதே இடத்தில் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. கூடங்குளத்தை சேர்ந்த நாராயணன் என்பவர் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள இரும்பு கடையில் வேலைபார்த்து வந்துள்ளார்.

அவர் நேற்று போதையில் ரெட்டேரி மேம்பாலத்தின் அடியில் உறங்கிக்கொண்டிருந்தபோது, நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் அவரின் பிறப்பு உறுப்பை கடித்து குதறியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிய அவருக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த மாதவரம் போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமாராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்