ஸ்ரீஹரிகோட்டா:
இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த, ராணுவ உளவு பணிக்காக ‘ரிசாட்-2பி’ ‘ராடார் இமேஜிங் சாட்டிலைட்’ என்ற செயற்கைக்கோளை மே 22ம் தேதி, இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’ விண்ணில் செலுத்துகிறது.
இந்த செயற்கைக்கோள், இந்திய எல்லைப்பகுதிகளை துல்லியமாக கண்காணித்து ராணுவத்துக்கு தகவல் அனுப்பும் வகையிலும், போர் விமானங்கள், கப்பல்கள் நடமாட்டத்தை கண்காணித்து உடனுக்குடன் தகவல் அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த செயற்கைக்கோள் பேரிடர் மேலாண்மை மற்றும் வேளாண்மை துறைக்கும் உதவும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி, காலை 5.47 மணியளவில் பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம், ஸ்ரீஹரிக்கோட்டா சதீஸ்தவான் மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் முடிந்த நிலையில், பிஎஸ்எல்வி சி 46 ராக்கெட் தயராக உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு இஸ்ரோ அறிவித்துள்ளது.
🇮🇳#ISROMissions🇮🇳#PSLVC46 getting ready for launch on 22nd May 2019…
Updates will continue !!! pic.twitter.com/qd6o9O3mqE— ISRO (@isro) May 20, 2019