ஸ்ரீஹரிகோட்டா:
ராடார் இமேஜிங் செயற்கைக்கோள் ‘ரிசாட் 2பிஆர்1’ ‘பிஎஸ்எல்வி 46’ ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து, ராடார் இமேஜிங் உளவு செயற்கைக்கோள் ‘ரிசாட் 2பிஆர்1’ ‘பிஎஸ்எல்வி 46’ ராக்கெட் மூலம் இன்று காலை 5.27 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
இது வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதால், விஞ்ஞானிகள் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர். இந்த செயற்கைக்கோள் எல்லா நேரத்திலும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நேரத்திலும் பூமியை தெளிவாக படம்பிடித்து அனுப்பும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.