வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ‘பிஎஸ்எல்வி சி48’

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ‘பிஎஸ்எல்வி சி48’

ஸ்ரீஹரிகோட்டா:

இஸ்ரோவின் பூமி கண்காணிப்பு செயற்ககோள் மற்றும் 9 வெளிநாட்டு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி48 ராக்கெட் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’, பூமிய கண்காணிக்க ‘ரிசாட் 2பிஆர்1’ செயற்கைகோளை தயாரித்தது. இந்த செயற்கைகோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பிஎஸ்எல்வி சி48 ராக்கெட் மூலம் இன்று மாலை 3.25 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒரு செயற்கைகோள், அமெரிக்காவின் 6 செயற்கைகோள்கள் என வணிக ரீதியிலான 9 செயற்கைகோள்களும் இந்த ராக்கெட்டில் வைத்து விண்ணுக்கு அனுப்பப்பட்டன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்