3 சென்ட் நிலம் எங்கே? கதி கலங்கிய திமுக எம்.எல்.ஏ.,

3 சென்ட் நிலம் எங்கே? கதி கலங்கிய திமுக எம்.எல்.ஏ.,

அரவக்குறிச்சி:
அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இடைதேர்தலில் அவர் கிராம மக்களுக்கு மூன்று சென்ட் நிலம் வழங்குவதாக மக்களிடம் வாக்குறுதி கொடுத்து ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றார்.

நெடுங்கூர் ஊராட்சியில் குளம் தூர்வாரும் நிகிழ்ச்சையை தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி, திமுக இளைஞரணி துணைச்செயலர் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தனர்.

பின், அங்கிருந்து கிளம்பிய செந்தில்பாலாஜியின் வாகனத்தை நெடுங்கூர் கிராம மக்கள் வழி மறித்தனர்.

தேர்தல் வாக்குறுதியில் சொன்ன 3 சென்ட் நிலம் எங்களுக்கு வேணும் என்று கிராம மக்கள் செந்தில் பாலாஜி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கதிகலங்கிய செந்தில் பாலாஜி போலீசாரை அனுப்பி கிராம மக்களை அப்புறப்படுத்த கூறியுள்ளார். பின்னர் போலீசார் வந்து கிராம மக்களை அப்புறப்படுத்தினர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்