ஆங்கிலத்தில் பதவியேற்ற எம்பி..! போராட்டத்தில் கன்னட அமைப்பு!!

ஆங்கிலத்தில் பதவியேற்ற எம்பி..! போராட்டத்தில் கன்னட அமைப்பு!!

பெங்களூரு:

நாட்டின் 17வது நாடாளுமன்ற கூட்டம் நேற்று முன்தினம் முதல் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

இந்த பதவியேற்பின்போது தமிழக எம்பிக்கள், தமிழ் வாழ்க தமிழில் பதவியேற்றுக்கொண்டனர். அப்போது பா.ஜ., எம்பிக்கள் பதிலுக்கு பாரத் மாதகி ஜெய், ஜெய் ஶ்ரீராம் என கோஷமிட்டனர்.

நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் கன்னட மொழியில் பதவியேற்றுக்கொண்டார். கர்நாடகத்திலிருந்து தேர்வான சுரேஷ் அங்கடி கன்னடத்தில் பதவியேற்காமல் ஆங்கில மொழியிலேயே பதவியேற்றார்.

இந்நிலையில், கன்னடத்தில் பதவியேற்காமல் ஆங்கிலத்தில் பதவியேற்ற கர்நாடக எம்பி சுரேஷ் அங்கடியை கண்டித்து கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்