சிங்கப்பூர் விமானத்தில் இயந்திர கோளாறு..! பயணிகள் உயிர் தப்பினர்..!!

சிங்கப்பூர் விமானத்தில் இயந்திர கோளாறு..! பயணிகள் உயிர் தப்பினர்..!!

சென்னை:

இயந்திர கோளாறு காரணமாக சிங்கப்பூர் விமானம் ஒன்று சென்னை விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு 165 பயணிகள் உட்பட 172 பேருடன் சென்ற விமானம் ஒன்றில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த விமான ஓட்டிகள், உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து வழியிலேயே தரையிறக்க முடிவுசெய்யப்பட்டு, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.

விமானியின் துரித நடவடிக்கையால் 172 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்