சென்னை:
நடிகர் வடிவேலுவுக்கு அடுத்த சிக்கலாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் வடிவேலு ‘இம்சை அரசன்’ பட பிரச்சனையில் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்குப்பின், தற்போது அஜித்தின் ‘வலிமை’ மற்றும் கமலின் ‘தலைவர் இருக்கின்றான்’ போன்ற படங்களில் நடிகர் வடிவேலு நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் மகிழ்ச்சியில் இருந்த வடிவேலுவுக்கு மீண்டும் ஒரு சிக்கலாக செய்தி வெளியாகியுள்ளது. ‘நானும் நியூம் நடுவுல பேயும்’ படத்திற்காக ரூ.1 கோடி முன்பணமாக நடிகர் வடிவேலு, தனது படத்தில் நடிக்கவில்லை என நடிகர் ஆர்.கே. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகாரளித்துள்ளார்.
மேலும், தனக்கு வரவேண்டிய பணத்தை திருப்பி தராவிட்டால், கமலின் ‘தலைவர் இருக்கின்றான்’ படத்தை வெளியிட முடியாது என ஆர்.கே. தெரிவித்துள்ளார்.