பிஆர்ஓ., அறிவித்த சிம்ரன்

  • In Cinema
  • February 12, 2020
  • 204 Views
பிஆர்ஓ., அறிவித்த சிம்ரன்

சென்னை:

மக்கள் தொடர்பு அதிகாரியாக யுவராஜை நடிகை சிம்ரன் நியமனம் செய்துள்ளார்.

தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகை சிம்ரன், தற்போது திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். திருமணத்துக்குப்பின் நடிப்பை குறைத்துக்கொண்டு, டிவி நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் கலந்துகொண்டு வருகிறார்.

இவர் தற்போது தனக்கு பிஆர்ஓ.,வாக யுவராஜ் என்பவரை நியமித்துள்ளதாக தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். நடிகர்கள் சியான் விக்ரம, ஜீவா, ஜி.வி.பிரகாஷ், பாபி சிம்ஹா, துருவ் விக்ரம், யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருதிஹாசன், ராசி கண்ணா மற்றும் ஆன்ரியா உள்ளிட்டோருக்கு யுவராஜ் பிஆர்ஓ.,வாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்