கண்ணடித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு ஒரே நாளில் உலகம் முழுவதும் வைரலானதால் புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.
‘‘ஒரு அடார் லவ்’’ படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த ரோஷன் இருவரும் தற்போது உண்மையிலேயே காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களிலும், சினிமா வட்டாரத்திலும் பேசப்பட்டு வருகிறது.
மேலும், ரோஷன் பிறந்தநாள் அன்று, ‘‘எனக்காக இருக்கும் ஒரே ஒருவர் நீ மட்டும்தான்’’ என இன்ஸ்டாகிராமில் பிரியா வாரியர் உருக்கமாக நன்றி தெரிவித்து பேசியிருந்தார்.
இதனையடுத்து, பிரியா வாரியர் தற்போது அளித்துள்ள பேட்டியில், ‘‘அது வெறும் வதந்திதான். காலப்போக்கில் அது மறைந்துபோகும்’’ என தெரிவித்துள்ளார்.