இந்தூர்:
மோடி மோடி என கோஷமிட்டவர்களை, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி காரிலிருந்து இறங்கி கை குலுக்கினார்.
மத்திய பிரதேசததில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும், பிரியங்கா காந்தி, சாலை மார்கமாக சென்றுகொண்டிருந்தார். அப்போது, சிலர் பிரியங்கா காரை கவனித்தவுடன், மோடி… மோடி… என கோஷமிட்டனர்.
இதனை கவனித்த பிரியங்கா காரை நிறுத்தியதுடன், இறங்கி அவர்களை நோக்கி சென்றார். கோஷமிட்டவர்களிடம் கை குலுக்கினார். அப்போது, உங்களுக்கு ஓரு நிலைப்பாடு உள்ளது. எனக்கென்று ஒரு நிலைப்பாடு உள்ளது என்று தெரிவித்துவிட்டு சிரித்த முகத்துடன் காரில் ஏறிச்சென்றார்.
இந்த சம்பவம் கோஷமிட்டவர்களை மிகவும் நெகிழவைத்தது. இந்த வீடியோவை காங்கிரசின் டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது.
इंदौर में कुछ लोगों ने प्रायोजित तरीक़े से मोदी-मोदी के नारे लगाए तो प्रियंका गांधी ने कार से उतर कर नारे लगाने वालों से हाथ मिलाया और कहा “आप अपनी जगह, मैं मेरी जगह ‘आल दी बेस्ट”।
इसे कहते हैं देश की मिट्टी, देश की जनता और देश के कण-कण से प्यार।
काश…मोदी भी देश को समझ पाते। pic.twitter.com/dEYL7CdaKI
— MP Congress (@INCMP) May 13, 2019