அரசியலில் நுழைய சொன்னவர் நெல்சன் மண்டேலா.. பிரியங்கா காந்தி.!

அரசியலில் நுழைய சொன்னவர் நெல்சன் மண்டேலா.. பிரியங்கா காந்தி.!

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாள் இன்று. இதனையொட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில், மண்டேலாவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் பிரியங்கா குறிப்பிட்டுள்ளதாவது:

நெல்சன் மண்டேலா போன்ற மனிதர்களை இந்த உலகம் இழந்துவிட்டது. அவரது வாழ்க்கை, உண்மைக்கும், அன்புக்கும், விடுதலைக்கும் அத்தாட்சியாக உள்ளது.

எனக்கு அவர் ‘அங்கிள் நெல்சன்’ ஆவார். நான் அரசியலில் இருக்க வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதற்கு முன்பே கூறியவர், மண்டேலா. அவர் எனது உந்துசக்தியாகவும், வழிகாட்டியாகவும் எப்போதும் இருந்து கொண்டிருப்பார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்