உயிரற்ற ஒரு கொடிய வைரஸ் தற்போது உலகத்தையே அழித்துக்கொண்டு வருகிறது. ஆறரை லட்சம் பேரை தாக்கிய இந்த வைரஸ் 31000க்கு மேல் உயிர்களை பறித்துள்ளது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் தற்போது உக்கரமாக இருக்கும் இந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் 1000 பேரை தாக்கி 21 பேரின் உயிரைப் பறித்துள்ளது.
இந்த வைரஸினால் இந்திய மக்கள், பிரதமர் மோடியின் திட்டமாகிய ஊடரங்கின் கீழ் வாழ்ந்துவருகின்றனர். மக்களின் பொழுதுப்போக்கிற்காக சினிமா பிரபலங்கள் அவர்கள் இந்த ஊடரங்கை எவ்வாறு எதிர்க்கொள்கிறார்கள் என்று ஒரு வீடியோ மூலம் மக்களுக்கு தெரிவிக்கிறார்கள். தற்போது ஒரு விஜய் பட நடிகை எல்லைக்கு மீறிய ஒரு காரியத்தில் இறங்கப்போகிறார்.
தளபதி விஜயின் “தமிழன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இவர் தற்போது ஹாலிவுட் பாலிவுட்டென கலக்கிக்கொண்டு வருகிறார். இவர் பிரபல பாடகரான நிக் ஜோனஸை சில ஆண்டிற்குமுன் திருமணம் செய்துக்கொண்டார். இவர் தற்போது “இந்த கொரோனாவால் உண்டான சுய தனிமைப்படுத்தலென்பது கடவுள் எனக்கும் என்னுடைய கணவனுக்கும் கொடுத்த வரம் என்று நான் கருதுகிறேன்”
“நாங்கள் இருவரும் வேலையில் முன்னரமாக இருந்ததால் எங்களுடைய இல்லற வாழ்க்கையில் அதிகம் ஈடுபட இயலவில்லை. அதற்கான நேரம் தான் இது. எங்களுக்கும் குடும்ப ஆசை வந்துவிட்டதற்கு இந்த சுய தனிமைப்படுத்துதலும் ஒரு காரணம்” என்று கூறியுள்ளார்.