மும்பை:
மகாராஷ்டிராவில் கவர்னரின் பரிந்துரையை ஏற்று குடியரசுத்தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.
மகாராஷ்டிராவில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்காததால், குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரைத்தார்.
இந்நிலையில், கவர்னரின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து, மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.
குடியரசுத்தலைவர் ஆட்சி அமலுக்கு வந்ததால், தேர்தலுக்கு பின் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.