சென்னை:
கடன் பிரச்சனையை சட்ட ரீதியாக தீர்வு காண்போம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கடன் தொகையை திருப்பி செலுத்தாத விஜயகாந்த் சொத்துக்களான வீடு மற்றும் கல்லூரியை வரும் ஜூலை 26ல் ஏலம் விடப்படும் என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தெரிவித்தது.
இதுகுறித்து பிரேமலாத விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொறியியல் கல்லூரியை மேம்படுத்துவதற்காக கடன் பெறப்பட்டது. இந்த பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு காண்போம்.
விஜயகாந்த் சினிமாவில் நடிப்பது இல்லை, திருமண மண்டபமும் இடிக்கப்பட்டதால் போதிய அளவு வருவாய் இல்லை. ஒவ்வொரு கால கட்டத்திலும் கடனை திருப்பி செலுத்தியே வந்தோம், விரைவில் கடனை அடைத்து கல்லூரியை மீட்போம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.