சென்னை:
சென்னையில் நடிகர் கமல்ஹாசனுடன் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார்.
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில், மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுடன், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2021ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு வியூகம் அமைத்துதர கமல் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ., மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் தேர்தல் வியூகம் அமைத்து கொடுத்தவர் பிரசாந் கிஷோர். மேலும், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தாவுடன் பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.