புதுடெல்லி:
நாடுமுழுவதும் கடந்த 19ம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவடைந்தது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 23ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிக்கின்றன, இதுகுறித்த வதந்திகளுக்கு தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Please read my statement below.#CitizenMukherjee pic.twitter.com/UFXkbv06Ol
— Pranab Mukherjee (@CitiznMukherjee) May 21, 2019