கோட்சே தேசபக்தர் எனக்கூறிய பிரக்யா சிங் மன்னிப்பு கேட்டார்..!

கோட்சே தேசபக்தர் எனக்கூறிய பிரக்யா சிங் மன்னிப்பு கேட்டார்..!

போபால்:

கோட்சே ஒரு தேச பக்தர் எனக் கூறிய பா.ஜ., வேட்பாளர் பிரக்யா சிங் மன்னிப்பு கேட்டார்.

கோட்சே குறித்த கமலின் சர்சை பேச்சுக்கு, காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர். அவர் எப்போதும் தேச பக்தராகவே நினைவுகூறப்படுவார் என்று போபால் பா.ஜ.., வேட்பாளர் சாத்வி பிரக்யா சிங் தெரிவித்திருந்தார்.

இந்த பேச்சுக்கு நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்த நிலையில், இதற்கு மோடியும், அமித்ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். பா.ஜ.,வும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கோட்சே குறித்த பேச்சுக்கு பா.ஜ., வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் மன்னிப்பு கோரியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்