அமராவதி:
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கட்டிய பிரஜாவேதிகா கட்டிடம் இரவோடு இரவாக இடித்து தள்ளப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமராவதி நகரின் கிருஷ்ணா நதிக்கரையின் கட்டியுள்ள பிரஜாவேதிகா கட்டிடத்தால் கடந்த திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்தது.
இந்த கட்டிடத்தை விதியை மீறி கட்டியுள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்று இரவோடு இரவாக இடித்து தள்ளப்பட்டது.