பயங்கர நிலநடுக்கம்; 14 பேர் பலி

  • In General
  • January 25, 2020
  • 179 Views
பயங்கர நிலநடுக்கம்; 14 பேர் பலி

எலாசிக்:

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 14 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு துருக்கியில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது. சுமார் 14 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், பீதியடைந்த மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

துருக்கி நாட்டின் எலாசிக் நகரில் 6.8 நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கட்டிட இடிபாடுகளிலிருந்து பொதுமக்களை மீட்க மீட்புக்குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்