‘காசு வாங்கிய நாயே’ போஸ்டரால் பரபரப்பு

‘காசு வாங்கிய நாயே’ போஸ்டரால் பரபரப்பு

மன்னார்குடி:

உள்ளாட்சி தேர்தலில் தோல்வியடைந்த விரக்தியில் ‘காசு வாங்ககிய நாயே! ஓட்டு போட்டாயா?’ என வீதி வீதியாக தோல்வியடைந்த வேட்பாளர் போஸ்டர் ஒட்டியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் ஓட்டு போட்ட மக்களுக்கு நன்றியை தெரிவிக்கும் நகையில் போஸ்டர் ஒட்டுவது வழக்கம். ஆனால் தற்போது தோல்வியடைந்தவர்களும் போஸ்டர் ஒட்டியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், மன்னார்குடி அருகே கீழப்பனையூர் கிராமத்தில் ‘‘காசு வாங்குன ஓட்டுப்போட்டாயா’’ என தனது பெயரை குறிப்பிடாமல் வேட்டபாளர் ஒருவர் பணம் வாங்கிய வாக்காளர்களை திட்டி போஸ்டர் ஒட்டியுள்ளார்.

தேர்தல் விதிமுறைப்படி ஒட்டுக்கு பணம் கொடுப்பதும், பணம் வாங்குவதும் குற்றமாகும். ஆனால் வாக்காளர்கள் கொடுத்த பணத்திற்கு ஓட்டுப் போடவில்லை என்று வேட்பாளர் ஒருவர் திட்டி போஸ்டர் ஒட்டியுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்