‘‘தபால் வாக்குகள் 8 மணிக்கு துவங்கும்’’ – தேர்தல் ஆணையம்

‘‘தபால் வாக்குகள் 8 மணிக்கு துவங்கும்’’ – தேர்தல் ஆணையம்

புதுடெல்லி:

வரும் 23ம் தேதி, காலை 8 மணிக்கே தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் 23ம் தேதி காலை 8 மணிக்க தபால் வாக்குகள் மற்றும் மின்னணு இயந்திரத்தில் செலுத்தப்பட்ட தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

தபால் வாக்குகள் எண்ணும் பணி நிறைவடையாவிட்டாலம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 8.30 மணிக்கு எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்