ஈரான், அமெரிக்காவுக்கு போப் பிரான்சிஸ் அறிவுரை

  • In General
  • January 10, 2020
  • 190 Views
ஈரான், அமெரிக்காவுக்கு போப் பிரான்சிஸ் அறிவுரை

வாடிகன்:

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுவதால், இரு நாடுகளுக்கும் போப் பிரான்சிஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் அந்நாட்டு ராணுவ தளபதி குவாஸிம் சுலைமானி உள்ளிட்ட ஏராளமானோர் கொல்லப்பட்டனரர்.

அந்நாட்டு தளபதியே கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அவரது ஈமச்சடங்கு முடிந்து ஒரு மணி நேரத்தில் ஈராக்கில் உள்ள 2 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால், இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து போப் பிரான்சிஸ் வாடிகனில் அளித்த பேட்டியில்,, இருநாடுகளும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டுமெனவும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி நிலவுவதற்கான நடவடிக்கைகளில் சர்வதேச நாடுகள் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்