சென்னை:
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலம் பெண்கள் போட சென்றால் குடும்பம் அலங்கோலமாக மாறிவிடும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறுபான்மையினரை தூண்டிவிட்டு போராட்டத்தை நடத்த திமுக முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.