ரூ.1000 பொங்கல் பரிசு முதல்வர் துவக்கம்

  • In Chennai
  • November 29, 2019
  • 193 Views
ரூ.1000 பொங்கல் பரிசு முதல்வர் துவக்கம்

சென்னை:

தமிழக மக்களுக்கு ரூ.1,000 மற்றும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாடி இன்று துவக்கி வைத்தார்.

ஏற்கெனவே கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழாவில், தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இதற்கா ரூ.2,363 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில், தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பில், ஆயிரம் ரூபாயுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகிய பொருட்கள் உள்ளன. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து மாவட்டங்களிலும் இன்னும் ஓரிரு நாளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்