சென்னை:
அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுடன் கூடிய ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படும். கரும்பு உள்ளிட்ட பொங்கல் வைக்கத் தேவையான பொருட்களுடன் சேர்த்து வழங்கப்படம் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.