‘‘தமிழக அரசு ஆணை தனக்கு பொருந்தாது’’

  • In Chennai
  • November 30, 2019
  • 193 Views
‘‘தமிழக அரசு ஆணை தனக்கு பொருந்தாது’’

சென்னை:

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்கக்கோரி தமிழக அரசின் ஆணை தனக்கு பொருந்தாது என பொன். மாணிக்கவேல் மாநில அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியான பொன். மாணிக்கவேலின் பதவிகாலம் இன்றோடு முடிவடையும் நிலையில், வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், சிலை கடத்தல் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டதால் தமிழக அரசின் ஆணை தனக்கு பொருந்தாது என தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்