பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பண்ணை வீட்டில் 6 மணிநேரம் சிபிஐ சோதனை.!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பண்ணை வீட்டில் 6 மணிநேரம் சிபிஐ சோதனை.!

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசுவின் பண்ணை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து 6 மணிநேரம் அதிரடி சோதனை நடத்தினர்.

பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வழக்கில், திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் பண்ணை வீட்டில் வீடியோ ஆதாரங்களை அதிகாரிகள் சேகரித்து, அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து பொதுமக்களிடம் விசாரணை நடந்தது.

இதனைத்தொடர்ந்து, பண்ணை வீட்டின் அருகில் உள்ள தோட்டங்களில் சோதனை நடத்தினர். சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் வீடுகளிலும் ஆய்வு செய்ய உள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்