பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
வரி ஏய்ப்பு புகார் காரணமாக 2 கடைகள், 2 தொழிலதிபர் வீடுகள் மற்றும் தென்னைநார் தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக வருமான வரித்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டது.
இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.