போலீஸ் ஆபாச பேச்சு வீடியோ வைரல்

போலீஸ் ஆபாச பேச்சு வீடியோ வைரல்

ஓசூர்:

குடிபோதையில் வந்ததாக இருசக்கர வாகன ஓட்டியிடம் சாவியை பறித்து காவலர் ஒருவர் ஆபாசமாக பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகர காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் விநாயக மூர்த்தி. இவர் பெரும்பாலும் இருசக்கர வாகன தணிக்கையில் ஈடுபடும் பணியை மட்டுமே செய்வது வழக்கம், இதன்மூலம் தினமும் பாக்கெட்டை நிரப்பி சென்றுவருவதாக ஓசூர் பகுதி மக்களின் நீண்டநாள் குற்றச்சாட்டு.

அவ்வாறு நேற்று மாலை ஓசூர் உள்வட்டசாலை (ரிங் ரோடு) பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் குடிபோதையில் இருந்ததாக கூறி அவர் வாகனத்தின் சாவியை காவலர் விநாயக மூர்த்தி தரும்படி கேட்கிறார் அவர் தர மறுக்கவே தலைமுடியை இறுக்கி பிடித்து மிரட்டி கேட்கிறார்.

பின்னர் காவலரே கையில் இருந்த சாவியை பிடுங்கி, அந்த நபரை ஆபாசமான வார்த்தைகளால் பேசி அடிக்கவும் முயல்வதை படம் பிடித்த நபர் சமூக வலைதளங்களில் பதிவிட, இருசக்கர வாகன ஓட்டியிடம் தவறான முறையில் நடந்துக்கொண்ட காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை வேண்டுமென பலராலும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்