நடிகர் சங்க நில முறைகேடு: சரத்குமார், ராதாரவிக்கு சம்மன்..!

நடிகர் சங்க நில முறைகேடு: சரத்குமார், ராதாரவிக்கு சம்மன்..!

சென்னை:

நடிகர் சங்க நிலம் விற்பனை தொடர்பான வழக்கில், வரும் 20ம் தேதி ஆஜராக நடிகர் ராதாரவி மற்றும் சரத்குமார் ஆகியோருக்கு காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சென்னை கூடுவாஞ்சேரி அருகே உள்ள கிராமத்தில், நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை, சங்க பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதீல் பெறாமல் முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் முறைகேடாக விற்பனை செய்துள்ளதாக நடிகர் சங்க தலைவர் விஷால் காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கூறினார்.

கடந்த ஜூன் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், விசாரணைக்கு நேரில் ஆஜாராகுமாறு நடிகர் விஷாலுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்