ஆசைவார்த்தை கூறி கர்ப்பம்..! இரவு 10 மணிக்கு நடந்த திருமணம்..!

ஆசைவார்த்தை கூறி கர்ப்பம்..! இரவு 10 மணிக்கு நடந்த திருமணம்..!

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம், தண்ணீர்குளத்தை சேர்ந்த தசரதனின் மகள் ஜீவிதா. இவர், சேலைகண்டிகை கிராமத்தை சேர்ந்த உறவினரான டில்லிபாபுவை சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

டில்லிபாபுவும் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தையை கூறி ஜீவிதாவிடம் உல்லாசமாக இருந்ததால் அவர் கர்ப்பமானார். இதனையடுத்து, திருமணம் செய்ய மறுத்து டில்லிபாபு தலைமறைவானார்.

அதிர்ச்சியடைந்த ஜீவிதா, திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், வேலை வி‌ஷயமாக ஆந்திரா மாநிலம் கடப்பாவில் இருந்த டில்லிபாபுவை அழைத்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துவைக்க போலீசார் முடிவுசெய்தனர். ஆனால் டில்லிபாபு தரப்பில் அதற்கு நீண்ட நேரம் மறுப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியபின், இரவு நடந்த பேச்சு வார்த்தையில் பெற்றோர்கள் சம்மதித்த நிலையில், 10 மணி அளவில் திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடிக்கு திருமணம் நடந்தது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்