சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற எஸ்.ஐ. சஸ்பெண்ட்.!

சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற எஸ்.ஐ. சஸ்பெண்ட்.!

சென்னை:

சென்னை முழுவதும் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
மேலும், பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காவல்துறையினரே ஹெல்மெட் அணியாமல் செல்வதாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

இதனையடுத்து தமிழக டிஜிபி திரிபாதி மாவட்ட காவல்துறைக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் அனைத்து போலீசாரும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மாம்பலம் எஸ்.ஐ., மதன்குமார் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார்.

இதனை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் யாரோ புகைப்படம் எடுத்து அதனை போக்குவரத்து காவல்துறைக்கு அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து இணை ஆணையர் மகேஸ்வரி, எஸ்.ஐ., மதன்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்