வீட்டுக்காவலில் சந்திரபாபு நாயுடு

வீட்டுக்காவலில் சந்திரபாபு நாயுடு

அமராவதி:

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் பேரணிக்காக ஆத்மக்கூர் சென்றுகொண்டிருந்த சந்திரபாபு நாயுடுவை தடுத்து வீட்டின் கேட்டை பூட்டி வைத்தனர். சந்திரபாபு நாயுடுவின் மகன் நரலோகேஷையும் வீட்டுக் காவலில் வைக்ப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியதையடுத்து, நரசராவ்பேட்டா, சட்டேனாபள்ளி, குரஜாலா உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு வீட்டுக்குச் செல்லமுயன்ற தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்