சென்னை:
சென்னையில் லஞ்சம் வாங்கியதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கையும் களவுமாக பிடிபட்டார்.
சென்னை, வில்லிவாக்கம் காவல் நிலைய குற்ற பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழழகன் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழழகனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.