சாலையில் பிரசவம் பார்த்த பெண் இன்ஸ்பெக்டர்

  • In Chennai
  • September 14, 2019
  • 208 Views
சாலையில் பிரசவம் பார்த்த பெண் இன்ஸ்பெக்டர்

சென்னை:
சென்னை சூளைமேட்டில் இரவு ரோந்து பணியில் பெண் காவல் ஆய்வாளர் ஈடுபட்டிருந்தார்.

அப்போது சாலையில் பிரசவ வலியால் நிறை மாத கர்ப்பிணி பெண் துடித்து கொண்டிருந்தார்.

இதனை கண்ட காவல் ஆய்வாளர் சித்ரா, கர்ப்பிணியை மீட்டு அருகில் இருந்த பெண் துப்புரவு தொழிலாளியுடன் இணைந்து பிரசவம் பார்த்துள்ளார். இதன் பின்னர் கர்ப்பிணி பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து தாயும், சேயும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். உடனடியாக செயல்பட்டு கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பெண் காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்