திருச்சி:
திருச்சி லலிதா ஜீவல்லர்ஸ் நகை கடையில் கடந்த 2ம் தேதி கொள்ளை நடந்தது.
இந்த சம்பவத்தையடுத்து குற்றவாளிகளை பிடிக்க போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இதில் திருவாரூர் முருகன் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அப்போது மணிகண்டனோடு இருசக்கர வாகனத்தில் சென்றபோது சுரேஷ் தப்பியோடி விட்டார்.
இந்நிலையில், செங்கம் நீதிமன்றத்தில் சுரேஷ் சரணடைந்தார்.
இதனையடுத்து சுரேஷை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தருமாறு நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில், அந்த மனுவை விசாரித்த நீதிபதி 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிப்பதற்கு அனுமதி அளித்தார்.