போலீஸ் கமிஷனர் ஆய்வு

  • In Chennai
  • November 14, 2019
  • 173 Views
போலீஸ் கமிஷனர் ஆய்வு

சென்னை:

சென்னை ஐஐடியில் கேரள மாணவி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை ஐஐடியில் கேரள மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக தன்னுடைய மகள் சாவில் பேராசிரியர்களுக்கு தொடர்பு இருப்பதாக கேரள முதல்வரிடம் பெற்றோர் நேரில் சந்தித்து புகாரளித்தார்.

மேலும், மாணவியின் தற்கொலை மத பேதம் காரணம் எனக்கூறி பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கேரள மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று இன்று விசாரணை நடத்தினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்