சென்னை:
சென்னையில் வாகனத்தில் செல்போன் பேசியபடி சென்றவர்கள் மீது ஒரே நாளில் 616 வழக்குள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில், சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக தொலைபேசி வழியாக உணவு விநியோகிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது நேற்று ஒரே நாளில் 616 வழக்குகள் பதிவுயப்பட்டுள்ளன என தெரிவித்தனர்.
மேலும், உணவுகளை விரைவாக கொண்டு சேர்ப்பதற்காக, விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டுவதாக வந்த புகாரை அடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.