சென்னை:
சென்னையில் போலீசாரின் ரத்ததான முகாமை முதல்வர் இன்று தொடங்கிவைத்தார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், காவலர்கள் ரத்ததானம் வழங்கும் முகாம் நடைபெறுகிறது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை துவக்கிவைத்தார்
தமிழகம் முழுவதும் 81 இடங்களில் நடைபெறும் இந்த ரத்ததான முகாம்களில் 13 ஆயிரத்து 868 காவலர்கள் ரத்த தானம் வழங்குகின்றனர்.