பாமக அலுவலகத்தக்கு தீவைப்பு

பாமக அலுவலகத்தக்கு தீவைப்பு

தஞ்சை:

தஞ்சை அருகே பாமக அலுவலகத்துக்கு மர்ம நபர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கஞ்சனூரில் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர்.

இந்த தீ விபத்தில், தூங்கிக்கொண்டிருந்த ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அலுவலகத்தில் இருந்த தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

இதுகுறித்து தகவறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்