பாமக 31ம் ஆண்டுவிழா..! கொண்டாடிய அன்புமணி..!!

பாமக 31ம் ஆண்டுவிழா..! கொண்டாடிய அன்புமணி..!!

சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சியின் 31வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை திநகர் கட்சி அலுவலகத்தில் அன்புமணி ராமதாஸ் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

கடந்த 1989ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை டாக்டர் ராமதாஸ் துவங்கினார்.

கட்சி துவங்கி இன்றோடு 30 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இன்று 31ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. சென்னை தியாகராயர் நகர், பர்கிட் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில், இளைஞரணி தலைவர் அன்புமணி கட்சி கொடியை ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

இதில் பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு இனிப்புகளை வழங்கினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்