சென்னை:
தேனி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றுள்ள அதிமுகவின் ஒரே எம்.பி.,யான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதனை உறுதிசெய்யும் வகையில், பிரதமர் அலுவலகத்திலிருந்து ரவீந்திரநாத் குமாருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.