புதுடெல்லி:
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு செயலாளர்களுக்கான கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
டெல்லியில் உள்ள மோடியின் இல்லத்தில், மத்திய அரசின் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் ஜிதேந்திரசிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், எளிதான வாழ்க்கை உயர்வு, நீர், விவசாயம், கால்நடை வளர்ப்பு, வணிகத்தை எளிதாக்குதல் மற்றும் அரசு துறைகளில் நவீன தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.