அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை!

அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை!

புதுடெல்லி:

நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தினமும் பங்கேற்காத அமைச்சர்கள் பதவி பறிக்கப்படும் என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

புதுடெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பா.ஜ., எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற அவை நடவடிக்கையின்போது, அமைச்சர்கள் பலரும் பங்கேற்பதில்லை என எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர் என தெரிவித்தார்.

எனவே, ஏதாவது ஒரு அவையில் அமைச்சர்கள் பதிலளிக்கவேண்டியது கட்டாயம் எனவும், இந்த கடமையிலிருந்து தவறும் அமைச்சர்கள் பட்டியலை தினமும் தமக்கு அனுப்புமாறு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு உத்தரவிட்டார்.

அமைச்சர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவர்கள் பதவியில் இருப்பதும், அதனை இழப்பதும் தீர்மானிக்கப்படம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்