காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி வருகிற 31ம் தேதி காஞ்சீபுரம் வருகிறார். அவருடன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலாசீதாராமன் ஆகியோரும் வருகிறார்கள்.
மோடி வருகைக்கான ஏற்பாடுககளை பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் சத்யபிரகாஷ் காஞ்சீபுரத்தில் ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.